Thursday, June 14, 2018

பகவத் கீதை - 1.23 - போர் செய்யப் போகிறவர்களை நான் காண வேண்டும்

பகவத் கீதை - 1.23 - போர் செய்யப் போகிறவர்களை நான் காண வேண்டும் 



योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागताः।
धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षवः॥२३॥

யோத்ஸ்யமாநாநவேக்ஷேऽஹம் ய ஏதே’த்ர ஸமாக³தா :|
தா⁴ர்தராஷ்ட்ரஸ்ய து³ர்பு³த்³தே⁴ர்யுத்³தே⁴ ப்ரியசிகீர்ஷவ : ||1-23||

யோத்ஸ்யமாநாந் = போர் செய்ய வந்து இருப்பவர்கள்

அவேக்ஷே அஹம் = நான் காண விரும்புகிறேன்

ய = யார் எல்லாம்

ஏதே = அவர்கள்

அத்ர = இங்கே

ஸமாக³தா = கூடி இருக்கிறார்களோ

 திர்தராஷ்ட்ரஸ்ய = திருதராஷ்டிரனின்

துர்புத்தேர் = துர் புத்தி, கெட்ட எண்ணத்தோடு

யுத்தே = போர் செய்ய

ப்ரியசிகீர்ஷவ  = ஆர்வம் கொண்டு, அல்லது அவனை மகிழ்ச்சி படுத்த

தீய எண்ணம் கொண்ட திருதராஷ்டிரினன் பிள்ளைகளை மகிழ்ச்சிப் படுத்த இங்கே போர் செய்ய வந்திருப்போரை நான் காண வேண்டும். 


துரியோதனனும் அவன் தம்பிகளும் தீயவர்கள். அவர்களை சந்தோஷப் படுத்த வந்திருக்கும் மற்றவர்கள் யார் யார் என்று காண வேண்டும் என்று நினைக்கிறான்.

தீமைக்கு துணை போகிறர்வர்களும் தீயவர்கள்தான். அவர்களும் அழிக்கப் பட வேண்டியவர்களே என்பது அர்ஜுனனின் எண்ணம்.

கோபம், வெறுப்பு, வீரம் இவற்றோடு வருகிறான் அர்ஜுனன். கடந்த கால வெறுப்பு தரும் நிகழ்வுகள் அவன் கண் முன் வந்து போகிறது. யாரையெல்லாம் அழிக்கப் பட போகிறார்கள் என்று பார்க்க விரும்புகிறான்.

மனதில் உள்ள வெறுப்பும், பகையும், கோபமும் ஒரு பக்கம்.

நேரில் பீஷ்மரையும், துரோணரையும் பார்க்கும் போது அவன் மனம்  மாறுகிறது.

உண்மைக்கும், நம் மனதில் உள்ள எண்ணங்களுக்கும் இடையில் நடக்கும் போர் தான் குருஷேத்ரம்.


உணர்வுகளுக்கும் உண்மைக்கும் நடுவில் நடந்த யுத்தம் தான் குருஷேத்ர போர்.

தேர் நகர்கிறது...நாமும் தான்



http://bhagavatgita.blogspot.com/2018/06/123.html

No comments:

Post a Comment