Sunday, June 10, 2018

பகவத் கீதை - 1.19 - கௌரவர்களின் நெஞ்சைப் பிளந்தது

பகவத் கீதை - 1.19 - கௌரவர்களின் நெஞ்சைப் பிளந்தது 


स घोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत्।
नभश्च पृथिवीं चैव तुमुलो व्यनुनादयन्॥१९॥

ஸ கோ⁴ஷோ தா⁴ர்தராஷ்ட்ராணாம் ஹ்ருத³யாநி வ்யதா³ரயத்|
நப⁴ஸ்²ச ப்ருதி²வீம் சைவ துமுலோ வ்யநுநாத³யந் ||1-19||


ஸ = அந்த

கோஷோ = கோஷம், போர் ஆராவாரம்

த்ர்தராஷ்ட்ராணாம் = திருதராஷ்டிர கூட்டத்தினரின்

ஹ்ருத³யாநி = இதயங்களை

வ்யதா³ரயத் =  பிளந்தது

நபஸ்ச = விண்ணையும்

ப்ருதிவீம்ச = மண்ணையும்

சைவ  = அது நிச்சயமாக

துமுலோ = பேரொலி

அவ்யநுநாத³யந்  = இடி போன்ற

பாண்டவ கூட்டத்தார் எழுப்பிய அந்த பேரொலி, மண்ணையும் விண்ணையும் அதிரச் செய்தது. அந்த ஒலி , கௌரவர்களின் இதயங்களைப் பிளந்தது. 

கௌரவர்களின் சேனை பெரியதுதான். கௌரவர்களின் பக்கம் பீஷ்மர், துரோணர் போன்ற பெரிய வீரர்கள் இருக்கிறார்கள். இருந்தும், பாண்டவ அணியினரின் போர் ஆராவாரம் , கௌரவர்களின் நெஞ்சைப் பிளந்தது.

ஆயுதங்களும், வீரர்களும் வெற்றியைத் தருவது இல்லை. அறம் மட்டுமே வெற்றியைத் தரும். கௌரவர்களின் பக்கம் நியாயம் இல்லை என்பதால் அவர்கள் மனதில் பயம் எழுந்தது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது தீராத  வாதம்.

கௌரவர்கள் பயந்தார்கள் என்று திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் கூறுகிறான்.

"திருதராஷ்ட்ரா, இப்போதும் ஒண்ணும் குடி முழுகி போய் விடவில்லை.  நீ நினைத்தால்  இப்பவும் இந்த கௌரவர்களை காப்பாற்றலாம். அவர்கள் பயந்து இருக்கிறார்கள்.  வெற்றி நிச்சயம் அல்ல. அழிவு நிச்சயம்" என்று கூறாமல் கூறுகிறான்.

தருமன் கேட்டது ஐந்து வீடு. சரியோ தவறோ, பங்காளிதானே. கொடுத்திருக்கலாம்.

ஐந்து வீடு தராத கஞ்சத்தனம், 99 தம்பியாரையும், குல குருவையும், பிதாமகரான பீஷ்மரையும் பலி கொண்டது.

வன்மம்.

ஈகை குணம் இல்லாத வறண்ட மனம்.

பயமும் அழிவும் வராமல் என்ன செய்யும்?


http://bhagavatgita.blogspot.com/2018/06/119.html

No comments:

Post a Comment