Thursday, March 15, 2018

கீதை - 1.08 - கெளரவ படைப் பட்டியல் தொடர்கிறது

 கீதை - 1.08 - கெளரவ படைப் பட்டியல் தொடர்கிறது 



भवान्भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः।
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च॥८॥

ப⁴வாந்பீ⁴ஷ்மஸ்²ச கர்ணஸ்²ச க்ருபஸ்²ச ஸமிதிஞ்ஜய:|
அஸ்²வத்தா²மா விகர்ணஸ்²ச ஸௌமத³த்திஸ்ததை²வ ச ||1-8||

ப⁴வாந் = நீ

பீ ⁴ஷ்ம = பீஷ்மர்

ச = மேலும்

கர்ணஸ்²ச = கர்ணன்

க்ருபஸ்²ச = கிருபன்

ஸமிதிஞ்ஜய: = போரில் வெற்றி கொள்ளும்

அஸ்²வத்தா²மா  =  அஸ்வத்தாமன்

விகர்ணஸ் = விகர்ணன் மேலும்

ச =மேலும்

ஸௌமத³த்திஸ்ததை = சோமதத்தன் மகன்

எவ = அது அன்றி

ச = மேலும்  ||1-8||


இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று துரோணருக்குத் தெரியாதா ?  "நீ மட்டும் இல்லை, இவர்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறார்கள்" என்று சொல்லாமல் சொல்கிறான்.

ஆச்சாரியனிடம் கூட பணிவு கிடையாது.

துரியோதனன், தர்மன் என்பதெல்லாம் ஒரு உருவகம். கெட்டவன் எப்படி இருப்பான், நல்லவன் எப்படி இருப்பான் என்று சொல்வதற்கு கிடைத்த பாத்திரங்கள். அவ்வளவுதான்.

துரியோதனின் குணம் நம்மிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

அடக்கம் இல்லாதது ஒரு அரக்க குணம்.

அது நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

மேலும் சிந்திப்போம்.



http://bhagavatgita.blogspot.com/2018/03/18.html



No comments:

Post a Comment