Sunday, March 18, 2018

கீதை - 1.12 - பீஷ்மரின் சங்கநாதம்

கீதை - 1.12 - பீஷ்மரின் சங்கநாதம் 



तस्य सञ्जनयन्हर्षं कुरुवृद्धः पितामहः।
सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान्॥१२॥

தஸ்ய ஸஞ்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்³த⁴: பிதாமஹ:|
ஸிம்ஹநாத³ம் விநத்³யோச்சை: ஸ²ங்க²ம் த³த்⁴மௌ ப்ரதாபவாந் ||1-12||

தஸ்ய = அவன்

ஸஞ்ஜநயந் = நிகழும்

ஹர்ஷம் = மகிழ்ச்சி

குருவ்ருத்³த⁴:  = வயதான குரு வம்சத்தவன்

பிதாமஹ:| = தாத்தா

ஸிம்ஹநாத³ம்  = சிம்ஹ நாதம் = சிம்ம நாதம்

விநத்ய = சப்தம் உண்டாக்கி

உச்சை: = மிக சப்தமாக

ஸ²ங்க²ம் = சங்கு

த³த்⁴மௌ  = முழங்கினான்

ப்ரதாபவாந் = பெருமை மிக்கவன்  ||1-12||

அப்போது, துரியோதனனுக்கு மகிழ்ச்சி உண்டாகுமாறு குரு வம்சத்தின் பெரிய தாத்தாவான பீஷ்மர் தன்னுடைய சங்கை எடுத்து சிங்க நாதம் செய்தார்.

வயாதான காலத்திலும் பெரியவர்கள் , இளையவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

முதன் முதலாக சங்கை ஊதியதின் மூலம், போரை பீஷமர் தொடங்கி விடுகிறார். போரை தொடங்கியது கௌரவர்கள் என்று ஆகிறது.

Guarvars fired the first bullet.

யுத்தம் தொடங்கியதில் துரியோதனனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

யுத்தம் அழிவைத் தரும் என்று அவனுக்குத் தெரியவில்லை. யார் அழிந்தாலும் பரவாயில்லை தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான்.

மூடத்தனத்தின் உச்சம்.

எத்தனை உயிர்கள் அழியும் , எத்தனை குடும்பங்கள் சிதையும் என்று அவன் நினைக்கவில்லை. சண்டை தொடங்கிவிட்டது என்று மகிழ்கிறான்.

இன்றும் பல தலைவர்கள், மக்களை பிரித்து அவர்களை சண்டையில் புகுத்தி  அதில் சந்தோஷம் காண்கிறார்கள்.

பிரிவினையை, சண்டையை, யுத்தத்தை, அழிவை விரும்பும் அரசியல் தலைவர்கள் துரியோதனைப் போல மூடர்கள்.

பீஷ்மர் சங்க நாதம் செய்தவுடன், "ஐயோ யுத்தம் தொடங்கி விட்டதே, எவ்வளவு  அழிவு வருமோ " என்று வருந்தி இருந்தால் அவன் நல்ல அரசன்.

அரசியல் தலைவர்களை கவனியுங்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனியுங்கள்.

துரியோதனன்கள் இன்றும் இருக்கிறார்கள் - வேறு வேறு பெயரில்.

http://bhagavatgita.blogspot.in/2018/03/112.html


No comments:

Post a Comment