Thursday, March 22, 2018

கீதை - 1.14 - மாதவனும் பார்த்தனும்

கீதை - 1.14 - மாதவனும் பார்த்தனும் 


ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ।
माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः॥१४॥

தத: ஸ்²வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்த³நே ஸ்தி²தௌ|
மாத⁴வ: பாண்ட³வஸ்²சைவ தி³வ்யௌ ஸ²ங்கௌ² ப்ரத³த்⁴மது: ||1-14||

தத: = பின்

ஸ்²வேதை ஹயைர் யுக்தே = வெள்ளை குதிரைகள் பூட்டிய

மஹதி ஸ்யந்த³நே =  பெரிய தேரில்

ஸ்தி²தௌ| = நின்ற

மாத⁴வ: = மாதவனும்

பாண்ட³வ = பாண்டவனான அர்ஜுனனும்

தி³வ்யௌ ஸ²ங்கௌ²=திவ்யமான சங்குகளை

ப்ரத³த்⁴மது: = ஊதினார்கள்  ||1-14||

பின்பு, அர்ஜுனனும், கண்ணனும் தங்கள் திவ்யமான சங்குகளை ஊதினார்கள்.

பெரிதாக ஒன்றும் இல்லை இந்த ஸ்லோகத்தில்.

யுத்தம் உறுதியாகிவிட்டது. கௌரவர்களின் அறைகூவலை பாண்டவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

http://bhagavatgita.blogspot.com/2018/03/114.html





No comments:

Post a Comment