Friday, March 25, 2016

கீதை - 14.21 - அர்ஜுனனின் கேள்வி

கீதை - 14.21 - அர்ஜுனனின் கேள்வி 


अर्जुन उवाच
कैर्लिङ्गैस्त्रीन्गुणानेतानतीतो भवति प्रभो ।
किमाचारः कथं चैतांस्त्रीन्गुणानतिवर्तते ॥१४- २१॥


அர்ஜுந உவாச
கைர்லிங்கை³ஸ்த்ரீந்கு³ணாநேதாநதீதோ ப⁴வதி ப்ரபோ⁴ |
கிமாசார: கத²ம் சைதாம்ஸ்த்ரீந்கு³ணாநதிவர்ததே


அர்ஜுந உவாச = அர்ஜுனன் கேட்கிறான்

கை = எந்த

லிங்கை = அடையாளங்களோடு இருப்பான் ?

த்ரீந் = மூன்ற

கு³ணா = குணங்களை

ஏதன் = இந்த

அதீதோ = கடந்தவன்

பவதி =அவன்

ப்ரபோ= பிரபுவே


கிம் = எப்படி, எதனால், எங்கு

ஆசார = நியதிப்படி , ஒழுக்கத்தில்

கதம் = எப்படி ?

சா = மேலும்

ஏதம் =  இந்த

த்ரீந் = மூன்று

கு³ணா = குணங்களை

அதி வர்ததே = கடந்து போகிறான்

அர்ஜுனன் சொல்லுகிறான், பிரபுவே !  இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் எப்படி இருப்பான் ? அவன் இவற்றை எப்படி கடக்கிறான்

சரி, இந்த மூன்று குணங்களைக் கடந்தால் அமிர்த நிலையை அடையலாம், என் தன்மையை  அடையலாம் அப்படின்னு சொல்ற, இதுவரைக்கும் அப்படி யாராவது  அடைந்து இருக்கிறார்களா ? ஆம் என்றால், எப்படி அடைந்தார்கள்  என்று எனக்குச் சொல் என்று அர்ஜுனன் கேட்கிறான்.

இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு ? நடை முறையில் சாத்தியமா ? என்பது  அர்ஜுனனின் கேள்வி.

அது மட்டும் அல்ல, அர்ஜுனன் இதை அறிவியல் பூர்வமாக அணுகுகிறான்.

யாராவது அடைந்து இருக்கிறார்களா ?

அப்படி அடைந்தவர்கள் எப்படி இருப்பார்கள் ? அவர்களின் அடையாளம் என்ன ?

எப்படி அதை அடைந்தார்கள் ?

அதாவது, இந்த மூன்று குணங்களையும் தாண்டி மேலே போக வழி இருக்கிறதா ?

இந்த கேள்விகளை அர்ஜுனன் மூலமாக கேட்பதன் மூலம் வியாசர் சில விஷயங்களை நமக்குச் சொல்கிறார்.

முதலாவது,  இது முடியக் கூடிய காரியம் தான். யாரோ அடைந்திருக்கிறார்கள் என்றால்  நம்மாலும் முடியும் தானே.

இரண்டாவது, இதை அடைய ஒரு வழி இருக்கிறது.  அந்த வழியில் போனால் அடையலாம்.

மூன்றாவது,  முயற்சி வேண்டும் அதை அடைய. ஏதோ ஒரு குலத்தில் பிறந்து விட்டால்  அது தானே வந்து விடாது.

நான்காவது, அப்படி அடைந்தவர்கள் மற்றார்களில் இருந்து தனித்து தெரிவார்கள். கண்டவுடன்அடையாளம் கண்டு கொள்ள முடியும். அது மட்டும் அல்ல, அப்படி அவர்களை அடையாளம் கண்டு கொண்டால் அவர்களைப் போலவே  நாமும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் தோன்றும்.

இதெல்லாம் முடியற காரியம் இல்லை,  நடை முறைக்கு ஒத்து வராது என்று நாம்  ஆரம்பிபதற்கு முன்பே அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார் வியாசர்.

வாருங்கள், எப்படித்தான் இந்த குணங்களை தாண்டி மேலே போவது என்று பார்ப்போம்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/03/1421.html )

No comments:

Post a Comment