Tuesday, June 27, 2017

பகவத் கீதை - 16.13 - பெற்றதும், பெறப் போவதும்

பகவத் கீதை - 16.13 - பெற்றதும், பெறப் போவதும் 



इदमद्य मया लब्धमिमं प्राप्स्ये मनोरथम् ।
इदमस्तीदमपि मे भविष्यति पुनर्धनम् ॥१६- १३॥

இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம் |
இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம் || 16- 13||


இதம் = இந்த

அ த்ய = இன்று

மயா = என்னால்

லப்தம் = அடையப் பெற்றது

இதம் = இன்று

ப்ராப்ஸ்யே = அடைவேன்

மநோரதம்  = மனோ ரதம் - கற்பனையில்

இதம்இ = இன்று

அஸ்தி = அது

இதம் = இன்று

அபி = மேலும்

மே = என்னால்

பவிஷ்யதி = அடையப்படும்

புனர்பு தனம்  = பெரிய செல்வம்

இவற்றை எல்லாம்  அடைந்து விட்டேன். இன்னும் பலவற்றை அடைய எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவற்றையும் அடைவேன்.

பெரிய பங்களாவில் இருப்பவன் , குடிசை வீட்டுக்கு ஆசைப் படுவானா ? ஆடி கார் வைத்து இருப்பவன் , சைக்கிளுக்கு ஆசைப்படுவானா ? பட்டம் படித்து முடித்தவன், ஆறாம் வகுப்பு தேற வேண்டும் என்று நினைப்பானா ?

மாட்டான் அல்லவா ?

 ஆனால் ஒரு காலத்தில் சிறிய வீட்டுக்கும், சைக்கிளுக்கும் , ஆறாம் வகுப்புக்கும் ஆசை பட்டவன் தானே ? ஆசை பட்டதை அடைந்தாகி விட்டதே. பின் என்ன ?

ஒவ்வொரு ஆசையும், அவை நிறைவேறிய பின், அதை விட பெரிய ஆசையை கொண்டு வந்து சேர்த்து விட்டுப் போகின்றன.

ஒரு ஆசை முடிந்தவுடன், மனிதன் நிறுத்துவது இல்ல. அதை விட பெரிய ஆசை வருகிறது. அதை நிறைவேற்ற மேலும் முயற்சி செய்கிறான்.

மனிதன் புரிந்து கொள்வதே இல்லை. ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் அர்த்தமே இல்லை என்பதை.

ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பயப்பட வேண்டும். ஏன்  என்றால், இப்போது இருக்கும் ஆசை நிறைவேறி விட்டால், அடுத்து என்ன பெரிய ஆசை வருமோ ? அது என்ன என்ன சிக்கல்களை கொண்டு வருமோ, என்று மனிதன் நினைத்து பயப்பட வேண்டும்.

 மாறாக,மனிதன் ஒவ்வொரு ஆசை நிறைவேறிய பின்னும், "ஆகா, நான் இதை சாதித்து விட்டேன், இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கற்பனை பண்ணி வைத்திருக்கிறேன். அதையும் அடைவேன் " என்று விளக்கி தேடும் விட்டில்களைப் போல ஆசைகளின் பின்னால் சென்று உழல்கிறான்.

அப்படி என்றால் ஆசையே இல்லாமல் இருக்க வேண்டுமா ? எதார்க்குமே ஆசைப்படக் கூடாதா ? அப்படி ஒரு வாழ்க்கையில் என்ன சுகம் , சுவாரசியம் இருக்கும் ? என்ற கேள்வி எழுவது நியாயம் தான்.

அதற்கும் விடை காண வேண்டும்.

கீதை அதற்கும் விடை தருகிறது.









No comments:

Post a Comment