Sunday, July 17, 2016

கீதை - 16.1 - தெய்வ சம்பந்தம் - பாகம் 1

கீதை - 16.1 -  தெய்வ சம்பந்தம் - பாகம் 1


श्रीभगवानुवाच
अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः ।
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥१६- १॥
ஸ்ரீ பகவாநுவாச
அபயம் ஸத்த்வஸம்ஸு²த்தி ⁴ர்ஜ்ஞாந யோக³வ்யவஸ்திதி: |
தா³நம் தமஸ்ச யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் || 16- 1||


ஸ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

அபயம் = பயம் இன்றி

ஸத்த்வஸம்ஸு²த்தி = உள்ளத் தூய்மை

ஞான யோக = ஞான யோகத்தில்

வ்யவஸ்திதி: = உறுதியுடன்

தாநம் = தானம்

தமஸ் = புலன்களை கட்டுப் படுத்தி

ச = மேலும்

யஜ்ஞஸ்= அர்ப்பணிப்புடன்

ச = மேலும்

ஸ்வாத்யாயஸ்தப = ஆழ்ந்து சிந்தித்து

ஆர்ஜவம் = நேர்மையுடன், எளிமையுடன்

பயமின்மை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, தானம், புலனடக்கம், தன்னலமின்மை, தீர்க்க சிந்தனை, நேர்மை மற்றும் எளிமை. 


தெய்வ சம்பந்தம் உள்ளவர்களின் குணங்களை பட்டியல் போடுகிறது கீதை. தெய்வ சம்பந்தம் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் ?

அதில் முதலாவது

பயமின்மை.....

பொதுவாகவே மத சம்பந்தப் பட்ட நூல்கள், பணியாக இரு, பெரியோர் சொல்வதைக் கேள், கீழ் படிந்து நட என்று நம்மை எப்போதும் பயந்த சுபாவம் உள்ளவர்களாக மாற்றி வைத்து விடும். சொன்ன படி கேட்காவிட்டால் சாமி கண்ணைக் குத்தும் என்று சின்ன வயதில் தொடங்கி, பாவம் செய்தால் நரகம் என்று பயமுறுத்தும். எண்ணெய் சட்டி, நெருப்பு, என்று ரொம்ப பயமுறுத்தும்.

கீதை தான் முதன் முதலில் பயமின்றி இரு என்கிறது.

தெய்வ சம்மதம் உள்ளவன் பயம் இன்றி இருப்பான். அவன் யாருக்கும், எதற்கும் பயப்படமாட்டான்.

உங்களுக்கும் பயம் எங்காவது இருந்தால், இன்னும் தெய்வ சம்மதம் ஏற்படவில்லை என்று அறிந்து கொள்ளுங்கள்.

"காலா என் கால் அருகில் வாடா " என்று சொன்ன பாரதியின் துணிவு இருக்க வேண்டும்.

பயம் எதனால் வருகிறது ?

அறிவின்மையால் பயம் வருகிறது. அறிவின்மையால் குழப்பம் வருகிறது. குழப்பத்தால் பயம் வருகிறது.

தெய்வ சம்பந்தம் உள்ளவர்களின் குணங்கள் என்னென்ன என்று பட்டியல் போட வந்த கீதை முதலில் சொன்னது "பயமின்மை" யைப் பற்றி.

"அச்சம் தவிர்"

எதற்கும் பயம். உண்மை என்று தெரிந்ததை செய்யப் பயம்.

பயம் நம்மை முடக்கிப் போட்டு விடும்.

தெய்வத்தை அணுக வேண்டுமா ? முதலில் பயத்தை விட வேண்டும்.



(வளரும்)

No comments:

Post a Comment