Tuesday, June 2, 2015

கீதை - 13.3 - அறிவியலின் தொடக்கம்

கீதை - 13.3 - அறிவியலின் தொடக்கம் 


तत्क्षेत्रं यच्च यादृक्च यद्विकारि यतश्च यत् ।
स च यो यत्प्रभावश्च तत्समासेन मे शृणु ॥१३- ३॥

தத்க்ஷேத்ரம் யச்ச யாத்³ருக்ச யத்³விகாரி யதஸ்²ச யத் |
ஸ ச யோ யத்ப்ரபா⁴வஸ்²ச தத்ஸமாஸேந மே ஸ்²ருணு || 13- 3||

தத் = அந்த

க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்

யச்ச =  எது?

யாத்³ருக்ச = எந்த வகைப்பட்டது

யத்விகாரி = எவ்வித மாற்றங்களைக் கொண்டது

யதஸ்²ச யத்  = எங்கிருந்து வந்தது

ஸ ச யோ = அவன் யார்

யத் ப்ரபாவஸ்ச = அவன் பிரபாவம் என்ன (பெருமை என்ன)

தத் = அவற்றை

ஸமாஸேந = சுருக்கமாக

மே = நான்

ஸ்ருணு = சொல்லக் கேள்


அந்த க்ஷேத்திரம் என்பது என்ன ? அது எந்த வகையானது ?  என்ன மாற்றங்களை உடையது ? எங்கிருந்து வந்தது? க்ஷேத்திரக்ஞன் என்பவன் யார்? அவன் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லக் கேள். 


அறிவது எது ? அறியப்படுவது எது? அறியப்படும் பொருள் எப்படியெல்லாம் மாறும்? அறிபவன் யார் ? அவனுடைய குணங்கள் என்ன ? 

இவற்றைப் பற்றி நான் சொல்லப் போகிறேன் என்று ஆரம்பிக்கிறான் கண்ணன். 

அறிவதும் , அறியப்படுவதும் இரண்டும்  சேரும்போதுதான் அறிவு பிறக்கிறது. 

இவற்றைப் பற்றி கீதை விளக்குகிறது. 

என்ன என்று பார்ப்போம். 



No comments:

Post a Comment