Tuesday, June 14, 2016

கீதை - 15.18 - புருஷோத்தமன் என்பது யார் ?

கீதை - 15.18 - புருஷோத்தமன் என்பது யார் ?



यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तमः ।
अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः ॥१५- १८॥

யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராத³பி சோத்தம: |
அதோऽஸ்மி லோகே வேதே³ ச ப்ரதி²த: புருஷோத்தம: || 15- 18||

யஸ்மாத் = அதனால்

க்ஷரம் = அழியக்கூடிய, மாறக் கூடிய

அ தீத = அதை தாண்டியவன், மீறியவன், கடந்தவன்

அஹம் = நான்

அக்ஷராத = அழியாத

அபி = இப்போது

ச =மேலும்

உத்தம:= சிறந்த , உயர்ந்த

அதோ = அதிலிருந்து

அஸ்மி = நான்

லோகே = உலகில்

வேதே = வேதங்களில்

ச = மேலும்

ப்ரதி²த: = அறியப்பட்ட, சிறப்பித்து கூறப் பட்ட

புருஷோத்தம: = புருஷோத்தமன்



நான் மாற்றத்தையும், மாறாதவற்றையும் கடந்து நிற்பதால், இந்த உலகில், வேதங்களில் நான் புருஷோத்தமன் என்று கூறப் படுகிறேன். 

இது முந்தைய ஸ்லோகத்தின் தொடர்ச்சி. 


நான் என்பது மற்றவற்றைக் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது என்று பார்த்தோம். 

பிள்ளையை வைத்து தகப்பன் என்று சொல்கிறோம். 

பிள்ளை இல்லை என்றால் தகப்பன் என்பது இல்லை. 

மனைவி இல்லை என்றால், கணவன் என்பது இல்லை.

உடன் பிறப்பு இல்லை என்றால், சகோதரன் என்பது இல்லை.

இப்படி வெளி உலகைக் கொண்டு நான் யார் என்று தீர்மானிக்கிறேன்.

வெளி உலகம் தவிர்த்து , நான் யார் ?

எனக்கு வெளியே உள்ள ஒவ்வொன்றின் மூலமும் நான் நிர்ணயிக்கப்படுகிறேன் என்று தெரிகிறது. 

வெளி உலக உறவைத் தவிர்த்து, நான் யாரோ அதுவே உத்தம புருஷன்.

நான் தகப்பன் இல்லை, தாய் இல்லை, சகோதரன் இல்லை, ஊழியன் இல்லை, இந்து இல்லை, இந்தியன் இல்லை...பின் நான் யார் ?

இந்த வேதாந்த கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். 

அதை அறிவதால் நமக்கு என்ன பயன் ? அதை அறிந்து என்ன செய்யப் போகிறோம் ?

நான் வேலைக்குப் போகிறேன். போகிற இடத்தில் சில நாள் பாராட்டும் கிடைக்கும், சில நாள் வசவும் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் போது மகிழ்கிறேன். வசவு கிடைக்கும் போது நான் கவலைப் படுகிறேன்.

இந்த இன்ப துன்பத்திற்கு காரணம் நான் ஒரு ஊழியன், வேலை ஆள் என்று நினைத்துக் கொள்வதால். நான் என்பது வேலை ஆள் இல்லை என்று அறியும் போது , இந்த மான அவமானங்கள் எனக்கு இல்லை என்றும் புரியும். 

தகப்பனாக, தாயாக, சகோதரன் , சகோதரியாக நமக்கு நாமே பல   பொறுப்புகளை  ஏற்றுக் கொள்கிறோம். அவற்றினால் துன்பப் படுகிறோம். 

அதற்காக பொறுப்பில்லாமல் இருக்கச் சொல்லவில்லை கீதை. ...பொறுப்புகளும், கடமைகளும் "எனக்கு " இல்லை. நான் என்பது இவற்றை எல்லாம் கடந்தவன் என்ற ஞானம் பிறக்க வேண்டும். 

பிறக்கும். 

(மேலும் படிக்க

http://bhagavatgita.blogspot.in/2016/06/1518.html

)








No comments:

Post a Comment