Thursday, June 30, 2016

கீதை - 15 அத்யாயம் - தொகுப்புரை - பாகம் 2 - எங்கே ஞானம் ?

கீதை - 15 அத்யாயம் - தொகுப்புரை - பாகம் 2 - எங்கே ஞானம் ?

ஞானம் என்பது புத்தகங்களிலோ , படித்த பண்டிதர்களின் சொற் பொழிவுகளிலோ இல்லை. அங்கிருந்து கல்வி வரலாம். செய்திகள் வரலாம். புதுப் புது சிந்தனைகள் வரலாம். 

அறிவு அல்லது ஞானம் என்பது உள்ளிருந்து வர வேண்டும். 

இயற்கையோடு ஒன்றும் போது , இயற்கையை உன்னிப்பாக கவனிக்கும் போது ஞானம் பிறக்கிறது. 

இதை மிக எளிதாக விளக்குகிறது கீதை. 

நாம் எங்கிருந்து வந்தோம், என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், நம்மை எது தூண்டுகிறது, எதனால் நாம் காரியங்களை செய்கிறோம், ஏன் துன்பம் வருகிறது, இந்தத் துன்பங்கள் வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும், மறு பிறப்பு உண்டா ? அது எப்படி நிகழ்கிறது ? நானே மீண்டும் பிறப்பேனா ? பிறவி உண்டு என்றால் அதை எப்படி தடுத்து நிறுத்துவது ?

இப்படி வாழ்வின் மிக மிக முக்கியமான கேள்விகளுக்கு கீதை பதில் தருகிறது.  ஜீவாத்மா, பரமாத்மா, என்றெல்லாம் போட்டு குழப்பாமல், மிக மிக எளிமையாக, நேரடியாக பதில் தருகிறது. 


நாம் எல்லோரும் எவ்வளவோ மரங்களை பார்த்து இருக்கிறோம். மரம் பார்க்காத மனிதர் உண்டா ?

மரத்தில் இருந்து இத்தனை கேள்விகளுக்கும் விடை காணலாம் என்கிறது கீதை. 


எப்படி ?

நாம் யார் ?

ஒரு மரத்தில் எத்தனையோ கிளைகளும் இலைகளும் இருக்கின்றன. அவை மரத்தின் ஒரு பகுதி.  ஒரு இலை "நான் யார்" என்று கேட்டால் , "நீ கிளையின் ஒரு பகுதி என்று சொல்லலாம்".

கிளை என்றால் என்ன என்று கேட்டால்,

கிளை என்பது மரத்தின் ஒரு பகுதி என்று சொல்லலாம்.

மரம் என்றால் என்ன என்று கேட்டால், 

மரம் என்பது விதையில் இருந்து முளைத்து வருவது என்று என்று சொல்லலாம்.

இப்படி ஒன்றில் இருந்து மற்றொன்றாக நாம் சொல்லிக் கொண்டே போகலாம். 

இதில் புரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், ஒரு மரத்தில் எத்தனையோ இலைகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரு விதையில் இருந்து வந்தது என்று புரிகிறது அல்லவா ?

அது போல, நாம் எத்தனை பேர் இருந்தாலும், நாம் வந்தது ஏதோ ஒன்றில் இருந்து என்று உணர முடிகின்றது அல்லவா ? 


ஒரு இலை பழுத்து இருக்கும், ஒரு இலை தளிராக இருக்கும், ஒரு இலை உயரே இருக்கும், ஒரு இலை கீழே இருக்கும், ஊர் இலை பசுமையாக இருக்கும் , ஒரு இலை கொஞ்சம் கருத்து இருக்கும் ...இப்படி ஆயிரம் வேறு பாடுகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரு மரத்தின் அங்கம் தானே...?


நாம் காரியங்களைச் (கர்மா) செய்கிறோம் ? எது நம்மைத் தூண்டுகிறது ? எதனால் நாம் இயக்கப் படுகிறோம் ?

அதற்கும் மரம் பதில் தருகிறது....



(மேலும் வாசிக்க

http://bhagavatgita.blogspot.in/2016/06/15-2.html

)







No comments:

Post a Comment