Friday, July 15, 2022

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 2

 

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 2



(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-1.html

)


இந்த ஸ்லோகத்தில் கீதை மூன்று விடயங்களைக் கூறுகிறது. 


முதலாவது, உலக விடயங்களில் ஒருவன் பற்று அற்று இருந்தால் அவை தானே விலகிப் போய் விடும். 



இரண்டாவது, அப்படியே விலகிப் போனாலும், பழைய வாசனை காரணமாக அவை மீண்டும் வரலாம். 


மூன்றாவது, இறை அனுபவம் நிகழ்ந்தால், அந்தப் பழைய விடயங்கள் மீண்டும் வந்தாலும், அதில் ஒரு சுவை இருக்காது. மனிதன் அவற்றால் ஈர்க்கப் பட மாட்டான்.


இதில் மூன்றாவதை நேற்று சிந்தித்தோம். ஒன்றை விட வேண்டும் என்றால், அதை விட உயர்ந்த ஒன்றைப் பற்றிக் கொள்ள வேண்டும். 


குழந்தை தெரியாமல் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தை எடுத்து விளையாடும். அதன் கையில் இருந்து பிடுங்க முடியாது. அது ஒரு புறம் இழுக்க, நாம் மறு புறம் இழுக்க, குழந்தை கையை கீறிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. 


அப்போது  என்ன செய்வோம் "இராஜா, அதைத் தந்தால் நான் உனக்கு சாக்லேட் தருவேன்,புது பொம்மை தருவேன்" என்றதும் குழந்தை கத்தியை கீழே போட்டுவிட்டு "சாக்லேட் தா" என்று கையை நீட்டும். 


அது போல மனம் உலகப் பற்றை விட வேண்டும் என்றால், அதை விட மிகுந்த இன்பம் தரக் கூடிய ஒன்றை பற்றிக் கொள்ள வேண்டும். 


பற்றுக பற்றற்றான் பற்றினை பற்றுக அப்பற்று விடற்கு என்பார் வள்ளுவர். 


உலகப் பற்றை விட வேண்டுமா? பற்றற்றானைப் பற்றிக் கொள் என்கிறார். 


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-2.html


(pl click the above link to continue reading)


குரங்கு ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு தாவும் போது எப்படிச் செய்யும். இருக்கிற கிளையை விட்டுவிட்டு அடுத்த கிளையை பற்றும். 


இறை அனுபவம் எல்லாம் பெரிய விடயம். எல்லாருக்குமா அது நிகழ்கிறது? நம்மால் அதை புரிந்து கொள்ள முடியாது. 


நமக்கு புரிகிற மாதிரி ஏதாவது இருக்கிறதா? 


இருக்கிறது. 


அழகாய் இருக்க வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தாங்கள் அழகாய் இருக்க வேண்டும் என்பதில் நிறைய கவனம் செலுத்துவார்கள். தங்கள் அழகுக்கு ஒரு குறை வர விட மாட்டார்கள். 


வயிறு காய்ந்தாலும் முகம் காயக் கூடாது என்று நினைப்பார்கள். 


அழகைக் குறைக்கும்  முதல் படி எது? வயிற்றில் தொப்பை போடுவது, உடம்பு ஊதிப் போவது. 


இருந்தும், எந்தப் பெண்ணாவது பிள்ளைப் பெற்றுக் கொள்ள விரும்பாமல் இருப்பாளா?  எவ்வளவு வலி என்றாலும், எவ்வளவு அழகு குறைந்தாலும், பிள்ளை என்பது பெரிய சுகம், பெருமை அல்லவா? அது கிடைக்கும் என்றால் கொஞ்சம் அழகு போனால் பரவாயில்லை என்று மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளகிறார்கள் அல்லவா?


அது போலத்தான் , இறை அனுபவம் (=பிள்ளை) வந்தால் உலக விடயங்கள் (=அழகு) தானே விட்டுப் போய் விடும்.


இது மூன்றாவதாக உள்ளது.


இனி முதல் விடயத்துக்கு வருவோம். 


நாம் ஒன்றின் மேல் விருப்பம் கொள்ளாவிட்டால் அவை தானே நம்மை விட்டு நீங்கி விடும். 


அது எப்படி?


மேலும் சிந்திப்போம் 

No comments:

Post a Comment