Thursday, July 14, 2022

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 1

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 1 


 विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः।

रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते॥५९॥


விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தே³ஹிந:|

ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்³ருஷ்ட்வா நிவர்ததே ||2-59||


விஷயா = விஷயங்கள் 

விநிவர்தந்தே = ஈடுபடுவது இல்லை 

நிராஹாரஸ்ய = நிராகரிக்கின்றன 

தே³ஹிந:| = உடம்பை பிரதானமாக நினைப்பவர்கள் 

ரஸவர்ஜம் = சுவையை விடுவது இல்லை 

ரஸோ = சாரம் 


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-1.html


(pl click the above link to continue reading)



அபி = இருந்தும் 


அஸ்ய = அதன் 


பரம்  = உயர்ந்த, சிறந்த, மேம்பட்ட 


த்³ருஷ்ட்வா = கண்ட பின் 


நிவர்ததே = அது நின்று விடுகிறது 


எதன் மேல் பற்று இல்லையோ, அவை ஒருவனை விட்டு தானே விலகிவிடுகின்றன. இருந்தும், அவற்றின் மேல் உள்ள சுவையினால் மனிதன் அவற்றை விடுவது இல்லை. பரம்பொருளை அனுபவித்தபின் அந்த சுவைகள் தீர்ந்து விடும். 



மிக உயரிய கருத்து. மிக மிக ஆழமான கருத்து. நிதானமாக படிக்க வேண்டிய ஒன்று. 


ஒரு வாய் காப்பி குடிக்கிறோம். மிக சுவையாக இருக்கிறது. நல்ல டிக்காஷன், கட்டியான பால், சுண்டக் காய்ச்சி, அளவான இனிப்பு சேர்த்து, ,சூடாக இருக்கிறது. அந்தக்மெல்லிய கசப்பும், பாலின் சுவையும், சர்க்கரையும் நாக்கில் நர்த்தனமாடும். 


இடையில் ஒரு இலட்டை ஒரு கடி கடிக்கிறோம்.அப்படி ஒரு சுவை. இனிப்பு, நெய், ஏலக்காய் நறுமணம், இடையிடையே கற்கண்டு. அடடா என்ன ஒரு சுவை. இரண்டு மூன்று துண்டுகளை இரசித்து சுவைக்கிறோம். 


அடடா, காப்பி ஆறிக் கொண்டே இருக்கிறதே என்று காப்பியை ஒரு மிடறு குடிக்கிறோம்.  காப்பி கசக்கிறது. அதே காப்பிதான். முதலில் சுவையாக இருந்தது. இப்போது கசக்கிறது. 


ஏன்?


நடுவில் இலட்டு தின்றதால். அதன் தித்திப்பு, காப்பியின் சுவையை மழுங்கடித்து விடுகிறது. 


அதே போல், 


உலக இன்பங்கள் சுவையானவைதான். கணவன், மனைவி, பிள்ளைகள், வீடு, கார், ,சினிமா, சாப்பாடு, இசை, நண்பர்கள், ஊரு சுற்றுவது என்பதெல்லாம் சுகம்தான். 


இதையெல்லாம் விடு என்றால் யார் விடுவார்கள்?


ஆனால்,


இறை அனுபவம் வந்து விட்டால், இந்த உலக சுகம் எல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியாது. 


உலக இன்பம் = காப்பி

இறை அனுபவம் = இலட்டு


உலக இன்பத்தை ஒன்றும் துறக்க வேண்டாம். இறை அனுபவம் வந்து விட்டால், உலக இன்பம் கொடுத்தாலும் வேண்டாம் என்போம். 



இறை அனுபவம் வந்த பின், "கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து" என்பார் அருணகிரிநாதர். 



பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை

விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,

அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!

கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!



தேன் புளிக்குமா? 


அரும்பும் தனி பரமானந்தம் அறிந்த அன்றோ கரும்பும் துவர்த்து என்றார். 


அதற்குப் பின் கரும்பை, தேனை கொண்டு வந்து தந்தாலும், "சீ சீ இது துவர்க்கும், புளிக்கும்" என்று தள்ளி விடுவோம். 


அதெல்லாம் சரி. அருணகிரிநாதருக்கு அப்படி ஒரு அனுபவம் வந்தது, நமக்கு அப்படி ஒன்றும் இல்லையே. நாம் ஏன் விட வேண்டும் என்ற கேள்வி வரும் அல்லவா?


விடை காண்போம். 




1 comment: