Wednesday, April 6, 2022

பகவத் கீதை - 2.54 - யோக நிலை அடைந்தவன் எப்படி இருப்பான் ?

 பகவத் கீதை - 2.54 - யோக நிலை அடைந்தவன் எப்படி இருப்பான் ?


अर्जुन उवाच

स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव।

स्थितधीः किं प्रभाषेत किमासीत व्रजेत किम्॥५४॥


சுலோகம் 


அர்ஜுந உவாச

ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ய கா பா⁴ஷா ஸமாதி⁴ஸ்த²ஸ்ய கேஸ²வ|

ஸ்தி²ததீ⁴: கிம் ப்ரபா⁴ஷேத கிமாஸீத வ்ரஜேத கிம் ||2-54||


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/04/254.html


(pl click the above link to continue reading)


அர்ஜுந உவாச = அர்ஜுனன் கேட்டான் 

ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ய = உறுதியான அறிவு உள்ளவன் 

கா பா⁴ஷா  = எப்படி பேசுவான் 

ஸமாதி⁴ஸ்த²ஸ்ய = சமாதி நிலை அடைந்தவன் 

கேஸ²வ| = கேசவா 


ஸ்தி²ததீ = உறுதியான புத்தி உள்ளவன் 


கிம்  = எப்படி 


ப்ரபா⁴ஷேத = சொல்லுவான் 


கிமாஸீத = எப்படி இருப்பான் 


வ்ரஜேத கிம் = எதை அடைவான் ?


சமாதி நிலை அடைந்து, உறுதியான மன நிலை அடைந்தவன் எப்படி இருப்பான், என்ன பேசுவான், எப்படி சொல்லுவான், அவன் அடைவது என்ன? 


மத நம்பிக்கை உள்ளவர்களிடம் ஏதாவது மதம், கடவுள் என்று ஏதாவது கேட்டால் கொஞ்சம் பதில் சொல்லுவார்கள், எப்போது அவர்களுக்கு பதில் தெரியவிலையோ அப்போது 


"அதெல்லாம் நம்பிக்கை சார்ந்தது, எல்லாத்தையும் கேள்வி கேட்கக் கூடாது, உனக்கு வேண்டுமானால் எடுத்துக் கொள், ,இல்லை என்றால் விட்டு விடு" என்று கோபம் கொள்ள ஆரம்பிப்பார்கள். 


இந்து மதம் என்பது நம்பிக்கையின் பால் உள்ளது அல்ல. 


கேள்வி கேட்பதை அது பெரிதும் ஆதரிக்கிறது. 


கீதை முழுவதுமே, அர்ஜுனன் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறான். அதுவும் கண்ணனை. கண்ணன் என்ன சொன்னாலும் அர்ஜுனன் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. கேள்வி கேட்கிறான். அதுதான் அறிவின் அடையாளம். சந்தேகம் பிறவிக் குணம். அறிவுத் தேடல் பிறவிக் குணம். எதைச் சொன்னாலும் மண்டையை ஆட்டுவது என்பது அறிவின் வெளிப்பாடு அல்ல. 


போன ஸ்லோகத்தில் கண்ணன் சொன்னான், உன்னுடைய விருப்பு வெறுப்பினால் நீ எதைக் கேட்டாலும் குழப்பம் அடைகிறாய். சமாதி நிலையில், உறுதியாக இருந்தால் நீ யோக நிலையை அடைவாய் என்றான். 


அப்படியா சரி என்று அர்ஜுனன் கேட்டுக் கொள்ளவில்லை.


உடனே கேள்வி கேட்கிறான். 


கண்ணா, யோக நிலை, உறுதியான மனம் (சித்தம்) என்று கூறுகிறாயே அப்படிப் பட்டவன் எப்படி இருப்பான்? அவன் எப்படி பேசுவான், என்ன சொல்லுவான்? அந்த நிலை அடைந்தால் அவனுக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்கிறான். 


பலன் இல்லாமல் ஒரு காரியம் செய்வானேன்? என்ன பலன் என்று தெரிந்து கொண்டால் பின் அதைச் செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம். 


கண்ணன், "நான் கண்ணன் சொல்கிறேன். பரந்தாமன் சொல்கிறேன். என்னையே கேள்வி கேட்கிறாயா ?" என்று சொல்லவில்லை. பொறுமையாக் பதில் சொல்கிறான். 


"ஸ்தி²தப்ரஜ்ஞன்" என்பது கீதையில் ஒரு முக்கியமான கோட்பாடு. 


உறுதியான மனம். அறிவு. சித்தம். 


அலைபாயாத தன்மை. ஒருமுகப் படுத்துதல். 


அது என்ன என்று கண்ணன் சொல்லப் போகிறான். 


கேட்போம். 



1 comment: