பகவத் கீதை - 2.62 - ஆசையும், கோபமும்
ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषूपजायते।
सङ्गात्सञ्जायते कामः कामात्क्रोधोऽभिजायते॥६२॥
த்⁴யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்க³ஸ்தேஷூபஜாயதே|
ஸங்கா³த்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோ⁴ऽபி⁴ஜாயதே
பொருள்
https://bhagavatgita.blogspot.com/2023/07/262.html
(to continue reading, please click the above link)
த்யாயதோ = சிந்திப்பவர்கள்
விஷயாந் = இந்த உலகில்
பும்ஸ: = அவர்கள்
ஸங்க³ஸ்தேஷூபஜாயதே|
ஸங்கா = தொடர்பு, தொடர்பினால், பற்றினால்
த்ஸு = அவற்றில்
உஞ்ஜாயதே = உதிக்கிறது
காம: = ஆசையினால்
காமாத் = அந்த ஆசையினால்
க்ரோதோ = கோபம்
அபிஜாயதே = வருகிறது
அடுத்த ஐந்து ஸ்லோகங்களில் மனித மனம் எவ்வாறு சலனப் படுகிறது, அதனால் வரும் சிக்கல்கள் பற்றி விளக்குகிறது.
மனம் எதை தொடர்ந்து சிந்திக்கிறதோ. அதன் மேல் ஆசை வருகிறது.
ஆசையில் இருந்து பற்று வருகிறது.
பற்றில் இருந்து கோபம் வருகிறது.
நாம் நினைப்போம், கோபம் என்றால் ஏதோ சத்தம் போடுவது, சண்டை போடுவது, சாமான்களை தூக்கி எறிவது, என்றெலாம் நினைப்போம். "எனக்கு கோபமே வராது. நான் யாரையும் அதிர்ந்து கூட பேசுவது கிடையாது" என்று சிலர் நினைக்கலாம்.
கோபம் என்பது வெளியில் செல்ல வேண்டும் என்றில்லை.
நான் வேற படிப்பு படித்து இருந்தால், பெரிய ஆளாயிருப்பேன். என் பெற்றோர் வேறு எதையோ படிக்க வைத்ததால் என்னால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்று பெற்றோர் மேல் கோபம் வரலாம்.
நல்ல பெண்ணை/கணவனை மணந்து இருந்தால் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும், இன்னும் சந்தோஷமா இருந்திருப்பேன் என்று வாழக்கை மேல் கோபம் வரலாம்.
பொருள்கள் மற்றும் அனுபவங்களை பற்றி சிந்தித்தால், அதன் மேல் பற்று வரும், பற்று வந்தால் ஆசை வரும், ஆசை வந்தால், அது கிடைக்கவில்லை என்றாலோ, அல்லது கிடைக்க தாமதம் ஆனாலோ கோபம் வரும்.
இது நம் மனதில், புத்தியில் வரும் நிகழும் முதல் சலனம் அல்லது மாற்றம்.
இவை நம் புத்தியை தடுமாறச் செய்துவிடும்.
அர்ஜுஜனுக்கு அரசின் மேல், செல்வத்தின் மேல் ஆசை இல்லை ஆனால் தாத்தா, ஆசிரியர் மேல்பற்று. அந்த பற்று அவனை தன் கடமையை செய்ய விடாமல் தடுக்கிறது. புத்தி தடுமாற்றம் நிகழ்கிறது. தடுமாறிய புத்தியில் இருந்து வரும் முடிவுகள் தடுமாற்றமாகத்தானே இருக்கும். அது எப்படி சரியாக இருக்கும்?
No comments:
Post a Comment