Sunday, November 23, 2014

கீதை - 11.22 - தொடரும் ஆச்சர்யம்

கீதை - 11.22 - தொடரும் ஆச்சர்யம் 


रुद्रादित्या वसवो ये च साध्या विश्वेऽश्विनौ मरुतश्चोष्मपाश्च ।
गन्धर्वयक्षासुरसिद्धसंघा वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे ॥११- २२॥

ருத்³ராதி³த்யா வஸவோ யே ச ஸாத்⁴யா விஸ்²வேऽஸ்²விநௌ மருதஸ்²சோஷ்மபாஸ்²ச |
க³ந்த⁴ர்வயக்ஷாஸுரஸித்³த⁴ஸங்கா⁴ வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஸ்²சைவ ஸர்வே || 11- 22||


ருத்ரா = ருத்திரர்களும்
ஆதித்யா = ஆதித்தன் வழி வந்தவர்களும்
வஸவோ = வசுக்களும்
யே = அவர்களும்
ச = மேலும்

ஸாத்யா =  சாத்யர்களும்

விஸ்²வே = அனைத்து கடவுள்களும்

அஸ்விநௌ = அஸ்வினி குமாரர்களும்

மருதஸ் = காற்றின் கடவுளும்

ச = மேலும்

உஷ்மபாஸ் = அக்னி கடவ்ளும்

ச = மேலும்

கந்தர்வ = கந்தர்வர்களும்

யக்ஷாஸுர = யக்ஷர்களும் அசுரர்களும்

ஸித்த = சித்தர்களும்

ஸங்கா = கூட்டம்

வீக்ஷந்தே = பார்க்கிறார்கள்


த்வாம் = உன்னை

விஸ்மித்தாஸ் = ஆச்சர்யத்துடன்

ச = மேலும்

இவ = நிச்சயமாக

ஸர்வே = அனைத்தையும்


ருத்திரர்களும், ஆதித்யன் வழி வந்தவர்களும் , வசுக்களும், சாத்யர், விசுக்களும் , அசுவினி தேவர்களும் , காற்று மற்றும் அக்னி தேவர்களும் , கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் என்று அனைத்து கூட்டத்தாரும் உன்னை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் 

எல்லோருக்குமே ஆச்சரியம்.

ஏன் ஆச்சரியம் ?

புரியாதது புரியும்போது அட, இது இப்படியா இருக்கிறது என்று ஆச்சரியம் விளையும்.

அறியும் வரைதானே ஆச்சரியம் இருக்க வேண்டும். மேலே கூறியவர்கள் விஸ்வரூபத்தை  அறியாதவர்களா ? பின் ஏன் ஆச்சர்யம் ?

ஆச்சர்யம் ஏன் என்றால், அவர்களால் அதை முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை .

அறிய அறிய மேலும் மேலும் புதிதாக ஏதோ தோன்றிக் கொண்டே இருப்பதால் அவர்களின் ஆச்சர்யம் தீரவில்லை.

உயிர்ப்புள்ள எதுவும் மாறிக் கொண்டே இருக்கும். உயிரில்லாதது மாறாமல் அப்படியே இருக்கும்.

உண்மையான ரோஜா மாறிக் கொண்டே இருக்கும்.

காகிதப் பூ என்றும் அப்படியே இருக்கும்.

விஸ்வரூபம் என்பது உயிருள்ளதது. நாளும் விரிந்து கொண்டே போவது.

எனவே ஆச்சர்யம் தொடர்கிறது.



Saturday, November 22, 2014

கீதை - 11.21 - எல்லோரும் உன்னை அடைகின்றனர்

கீதை - 11.21 - எல்லோரும் உன்னை அடைகின்றனர் 


अमी हि त्वां सुरसंघा विशन्ति केचिद्भीताः प्राञ्जलयो गृणन्ति ।
स्वस्तीत्युक्त्वा महर्षिसिद्धसंघाः स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः ॥११- २१॥

அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா⁴ விஸ²ந்தி கேசித்³பீ⁴தா: ப்ராஞ்ஜலயோ க்³ருணந்தி |

ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்³த⁴ஸங்கா⁴: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி⁴: புஷ்கலாபி

அமீ = அவர்கள்

ஹி = நிச்சயமாக

த்வாம் = உன்னை

ஸுர ஸங்கா = தேவர்களின் கூட்டம் (சுர - அசுர )

விஸ²ந்தி = அடைகிறார்கள் 

கேசித் = வேறு சிலரோ

பீ⁴தா: = பயத்தில்

ப்ராஞ்ஜலயோ = ப்ர + அஞ்சலி = கூப்பிய கைகளோடு - வணங்கிக் கொண்டு 

க்³ருணந்தி = போற்றி

ஸ்வஸ்தி = மங்களம் உண்டாகட்டும் என்று

இதி = இப்படி

யுக்த்வா  = கூறிக் கொண்டு (வாக் = வாக்கு , வார்த்தை )

மஹர்ஷி = மகரிஷிகள்

ஸித்த = சித்தர்கள்

ஸங்கா = கூட்டம்

ஸ்துவந்தி  = போற்றி

த்வாம் = உன்னை

ஸ்துதிபி: = துதி செய்து கொண்டு

புஷ்கலாபி = உரத்து சொல்லிக் கொண்டு


தேவர்களின் கூட்டம் உன்னுள்ளே புகுகின்றது. சிலர் பயம் கொண்டு உன்னை கை தொழுது உன்னை புகழ்கின்றனர். மகரிஷிகளும், சித்தர்களும் உன்னை உரத்த குரலில் தொழுது அடைகின்றனர். 


மூன்று வகையான விஸ்வரூப தரிசனங்களை எங்கே கீதை சொல்கிறது.

முதலாவது......

கடவுளை நாம் எப்போது நினைக்கிறோம் ?

துன்பம் வரும்போது, பயம் வரும்போது கடவுளை நினைக்கிறோம்.

நம்மால் முடியாது என்ற நிலை வரும் போது கடவுளை நினைக்கிறோம்.

மனித சக்தியை மீறிய ஒன்று இருக்கிறது என்ற நினைவு வரும்போது கடவுள் நினைவு வருகிறது.

அதை கடவுள் என்று சொல்லாவிட்டாலும் விதி, இயற்கை , மனிதனை மீறிய சக்தி என்று  பல பெயர்களில் கூறுகிறோம்.

இது ஒரு வகையில், இந்த உலகம் என்பது என்னைத் தாண்டி விரிந்து பட்டது என்று அறிய  உதவுகிறது. இந்த மிகப் பெரிய பிரபஞ்சத்தில் நான் ஒரு சின்ன துகள். இந்த பிரமாண்டத்தின் முன் நான் ஒன்றும் இல்லை என்ற நினைப்பு வர உதவுகிறது.

இது ஒரு வகை விஸ்வரூப தரிசனம். இதைத்தான் 

நான், என் திறமை, என் சாமர்த்தியம் , என் சமர்த்து என்ற நிலை கடந்து என்னால் ஆவது  ஒன்றும் இல்லை அறிவது.

இதைத்தான் "சிலர் உன் மீது பயம் கொண்டு உன்னை கைதொழுது அடைகிறார்கள்" என்கிறது கீதை.

அறியாமையினால் பயம் வருகிறது.


இன்னொரு வகையான விஸ்வரூப தரிசனம் எது வென்றால் , படித்து அறிந்து,  தெளிந்து அதை உணர்வது.

இந்த உலகம் தோன்றியது எப்படி, அதன் பிரமாண்டம், அதன் விரிந்துபட்ட வடிவம் , இதில் நம் நிலை என்று அறிந்து அந்த பிரமாண்டத்தை அறிவது இன்னொரு வகையான  விஸ்வரூப தரிசனம். இது அறிவின் பாற்பட்டது. அறிவு சலனம் கொண்டது. சந்தேகம் கொண்டது. ஒரு நாள் தெளியும், மறு நாள் சந்தேகம் கொள்ளும். தெளிவுக்கும், சந்தேகத்திற்கும் இடையே தர்க்கம் பண்ணிக்  கொண்டே இருக்கும். இந்த தர்க்கம் தான் இரைச்சல், கேள்வி, பதில், வாதம், பிரதி வாதம் என்று நீண்டு கொண்டே போகிறது.

இதைத்தான் கீதை "ரிஷிகளும், சித்தர்களும் உரத்த குரலில் கூறிக் கொண்டே உன்னை அடைகிறார்கள் " என்கிறது.

பூஜை, பஜனை, பாடல், ஆடல், திருவிழா, சடங்குகள், சம்ப்ரதாயங்கள், மந்திர உச்சாடனங்கள்  என்ற ஆரவாரம் கொண்டது.

இது இன்னொரு வகை.

மூன்றாவது வகை, இந்த விசவரூபத்தை அறிந்து, தெளிந்து, சந்தேகம் இல்லாமல், சப்த்தம் இல்லாமல் இது தான் உண்மை என்று அறிந்து அதில் இரண்டற கலப்பது. இன்னும் சொல்லப் போனால் அது வேறு தான் வேறு என்ற வித்யாசம் மறைந்து ஒன்றாகி விடுவது.  இதைத்தான் "தேவர்களின் கூட்டம் உன்னுள்ளே புகுகிறது" என்கிறது கீதை.

அவர்கள் இரண்டற கலக்கிறார்கள்.  புகுந்து விடுகிறார்கள். அந்த விஸ்வரோபத்தில் அவர்களும்  ஒரு பகுதியாகி விடுகிறார்கள்.

பயத்தினால் , அறியாமையினால் தன்னை காக்க வேண்டி அந்த உணர்வு பெறுவது ஒரு வகை.

அறிவின் துணை கொண்டு, இது இப்படித்தான் இருக்குமோ என்று உணரத் தலைப் படுவது இன்னொரு வகை.

பரிபூர்ணமாக உணர்ந்து, அதில் இரண்டற கலப்பது என்பது மூன்றாவது வகை.

பயம், அறியாமை, அறிவு, தெளிவு என்று இந்த பிரமாண்டத்தை அறியும் படிகள்  இவை.

மேலும் அறிவோம்....




Tuesday, October 28, 2014

கீதை - 11.20 - எங்கும் வியாபித்து

கீதை - 11.20 - எங்கும் வியாபித்து 


द्यावापृथिव्योरिदमन्तरं हि व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः ।
दृष्ट्वाद्भुतं रूपमुग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं महात्मन् ॥११- २०॥

த்³யாவாப்ருதி²வ்யோரித³மந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேந தி³ஸ²ஸ்²ச ஸர்வா: |
த்³ருஷ்ட்வாத்³பு⁴தம் ரூபமுக்³ரம் தவேத³ம் லோகத்ரயம் ப்ரவ்யதி²தம் மஹாத்மந் ||

த்யாவா ப்ருதிவ்யோ = தியா என்றால்  தீபம்.ஒளி.  ஒளி வீசும் விண்ணுக்கும்; ப்ரித்வி என்றால் நிலம். பூமி. ஆகாயத்திற்கும் பூமிக்கும்

இதம் = இந்த 

அந்தரம் = உள்ளே 

ஹி = நிச்சயமாக

வ்யாப்தம் = வியாபித்து , நிறைந்து

த்வயை = உன்னால்

ஏகேன = ஒருவனாய்

திஸ = திசைகளிலும்

ச = மேலும்

ஸர்வா:  = அனைத்து

த்ருஷ்ட = காணும் 

ஆத்புதம்  = அற்புதம்

ரூபம் = வடிவம்

உக்ரம்  = உக்கிரமான

லோகத்ரயம்= மூன்று உலகங்களிலும்

ப்ரவ்யதி²தம் = நடுங்கும்படி

மஹாத்மந் = உயர்ந்த

விண்ணுக்கும், மண்ணுக்கும் ஒன்றாய் நிறைந்த உன் உக்கிரமான வடிவைப் பார்த்து மூன்று உலகங்களும் நடுங்குகின்றன 

நீங்கள் இருக்கும் அறை . அதையும் மற்ற அறைகளையும் சேர்த்து உங்கள் வீடு. உங்கள் வீட்டையும், மற்ற வீடுகளையும் சேர்த்து உங்கள் apartment . உங்கள் அபர்த்மென்ட் -டையும் மற்றவற்றையும் சேர்த்து உங்கள் தெரு. உங்கள் தெரு போல  பல தெருக்கள் சேர்த்த உங்கள் இடம் அல்லது ஊர். உங்கள் ஊரோடு பல  ஊர்கள் சேர்ந்து உங்கள் நாடு.

உங்கள் நாட்டைப் போல பல நாடுகள் சேர்ந்து இந்த பூமி. உங்கள் பூமியைப்   போல  பல கிரகங்கள் சேர்ந்து இந்த சூரிய குடும்பம். உங்கள் சூரிய குடும்பம் போல  சூரிய குடும்பங்கள் சேர்ந்து உங்கள் பால் வெளி என்று இந்த உலகம  விரிந்து கொண்டே போகிறது.

மாடியில் இருந்து பார்த்து பார்த்தால் அறைகள் தெரியாது...வீடுகள் தெரியும்.

மலை மேல் நின்று பார்த்தால் வீடுகள் தெரியாது, நகரம் தெரியும்.

ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் நகரம் தெரியாது நாடு தெரியும்.

இப்படி நம் பார்வை விசாலமாக விசாலமாக மேடு பள்ளங்கள், ஏற்றத் தாழ்வுகள்  மறைந்து அனைத்தும் சமம் என்று தோன்றும்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் உள்ள அனைத்தும் ஒரு  சக்தியின் வெளிப்பாடு  என்று பார்க்கும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் அது நிறைந்து  நிற்கிறது. எங்கும் வியாபித்து நிற்கிறது.

மாமன், மச்சான், குரு, தாத்தா, என்று பிரித்துப் பார்த்த அர்ஜுனன் இப்போது  சேர்த்துப்  பார்க்கிறான். எங்கும் நிறைந்து நிற்கும் ஒன்றைப் பார்க்கும் போது அவனுக்கு  நடுக்கம் வருகிறது. இதுவரை கண்டிராத ஒன்று.

அனைத்தையும் ஒன்றாகக் காண்பதுதான் விஸ்வரூப தரிசனம்.

சூரியனையும், சந்திரனையும், கிரகங்களையும், பால்வெளியையும் ஒன்றாக  சேர்த்து பாருங்கள்.

எவ்வளவு பெரிய பிரமாண்டம். அதை நினைக்கும் போது அர்ஜுனனக்கு நடுக்கம் வருக்கிறது .

இதுவரை அப்படி அவன் பார்த்தது இல்லை.

தான் பெரிய வில்லாளி, அழகன் என்ற ஆணவம் எல்லாம் அவனை விட்டுப் போகிறது. நடுங்குகிறான். இதன் முன்னால் நாம் ஒன்றும் இல்லை என்ற பயம் வருகிறது.

அவன் மட்டும் என்ன ?  நாமும்தான்.

உலகை பிரித்து பிரித்து பார்த்தே நாம் பழகி விட்டோம். சேர்த்துப் பார்க்க பழகுவோம்.

சேரச் சேர அதன் பிரமாண்டம் தெரியும். நம் ஆணவம் விலகும்.  பணிவு வரும். எல்லாம் ஒன்றுதான் என்ற ஒற்றுமை உணர்வு வளரும்.

உள்ளே போகப் போக ஆத்மா என்ற ஒன்றை அடைவோம்.

அதை உணர்வது கடினம் ஏன் என்றால் அதை பார்க்க முடியாது.

உள்ளே செல்லும் பார்வையை வெளியே செலுத்தினால் உலகம் விரிந்து கொண்டே போகும்.

அந்த பிரமாண்டம்தான் விஸ்வரூபம்.

நம் பார்வை விரியட்டும்.

விஸ்வரூபம் நம் முன்னே விரிந்து கிடக்கிறது. நாம் தான் நம் பார்வையை குறுக்கிக் கொண்டு  அதை உணர்வதை தவிர்க்கிறோம்.

நீங்கள் நினைத்தால் இன்றே அந்த விஸ்வரூப தரிசனம் உங்களுக்கு கிடைக்கும்.

கிடைக்கட்டும்.


கீதை - 11.19 - சூரியனையும் சந்திரனையும் கண்களாகக் கொண்டு

கீதை - 11.19 -  சூரியனையும் சந்திரனையும் கண்களாகக் கொண்டு   


अनादिमध्यान्तमनन्तवीर्य मनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥११- १९॥

அநாதி³மத்⁴யாந்தமநந்தவீர்ய மநந்தபா³ஹும் ஸ²ஸி²ஸூர்யநேத்ரம் |
பஸ்²யாமி த்வாம் தீ³ப்தஹுதாஸ²வக்த்ரம் ஸ்வதேஜஸா விஸ்²வமித³ம் தபந்தம் || 11- 19||


அநாதி - மத்யா - அந்தம் = தொடக்கம், நடு , முடிவு இல்லாத

அநந்த வீர்ய = எல்லை அற்ற வீர்யம் உள்ள

அநந்த பாஹும் = அனேக தோள்களுடன்

 ஸஸி ஸூர்ய நேத்ரம் = சந்திரனையும், சூர்யனையும் கண்களாகக் கொண்டு

பஸ்²யாமி = பார்கிறேன்

த்வாம் = உன்னை

தீப்தஹுதாஸவக்த்ரம் = கொழுந்து விட்டு எரியும் தீ போன்ற வாயினையும்

ஸ்வ தேஜஸா = தன்னுடைய ஒளியினால்

விஸ்வ மிதம் தபந்தம் = இந்த உலகை எரிப்பவனாகவும் காண்கிறேன்

தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.

இது ஏதோ ஒரு பயங்கரமான உருவம் போல  இருக்கிறது. தீ கக்கும் வாய், சூர்ய சந்திரர்கள் கண் போன்றவை என்றால் ஒரு கண்

பெரிதாகவும்,இன்னொன்று ரொம்ப சிறிதாகவும் இருக்கும். பார்க்க சகிக்காது. பல்லாயிரம் தோள்கள், பெரிதும் சிறிதுமான  கண்கள்....

விஸ்வரூபம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டால் இந்த சிக்கல் இருக்காது.

இதை கொஞ்சம் எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்.

 அழகான பெண்ணைப் பார்க்கிறோம்.

அந்த பெண் எப்படி இருக்கிறாள் என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

அவள் கண் நான்கு சென்டிமீட்டர் அகலமும், ஒரு சென்டிமீட்டர் உயரமும் இருந்தது, அவள் ஐந்து அடி எட்டு அங்குலம் இருந்தாள் , எடை ஒரு அறுபது கிலோ இருக்கும் ...என்றா சொல்லுவோம்....

இது எல்லாம் அவளின் கூறுகள்தான் தான்...

ஆனால் அந்த பெண் என்பவள் இந்த கை கால் மூக்கு என்ற அவயங்கள் இல்லை.

இவை அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை.

ஒரு முழுமையான ஒரு உருவம்.

பெண் என்பது ஒரு உதாரணத்திற்கு  சொன்னது.

தாஜ் மகால் என்றால் என்ன என்று கேட்டால் அது இத்தனை ஆயிரம் சலவை கற்களை கொண்டது என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அந்த கற்கள் அனைத்தையும் ஒன்று சேர பார்பதுதான் தாஜ் மகால். ஒவ்வொரு கல்லாகப் பார்த்தால்  தாஜ் மகால்  தெரியாது.கல்தான்  தெரியும்.

அது போல,

இந்த  ,உலகை , இந்த பிரபஞ்சத்தை ஒன்றாகப் பார்க்க  வேண்டும்.

கையும் காலும், கண்ணும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவைதான்.  அனைத்தும் சேர்ந்து ஒரு பெண்ணாக நாம் பார்ப்பது இல்லையா ?

அது போல

 மரமும்,செடியும், ஆணும், பெண்ணும், விலங்குகளும், உயிரற்ற பொருள்களையும் ஒன்றாகக் காண்பதுதான் விஸ்வ ரூபம்.

 விஸ்வம் என்றால்  உலகம்.

ரூபம் என்றால்  வடிவம்.

 உலகை ஒரே வடிவாக காண்பது  விஸ்வரூபம்.

இப்போது மீண்டும் ஸ்லோகத்தைப்  பார்ப்போம்.


தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.


இந்த உலகில் உயிர்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன, வாழ்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்து கொண்டும் இருக்கின்றன. 

பிறப்பு ஒரு போதும்  நிற்பது இல்லை. அது போலவே  நடுவான வாழ்வும், இறுதியான இறப்பும். இது தொடர்ந்து நடந்து கொண்டே  இருக்கிறது.

இவற்றை நீங்கள் ஒன்றாகப் பார்த்தால் தெரியும் இது தொடக்கம், நடு மற்றும் இறுதி இல்லாதது  என்று. ஒரு சக்கரம் போல  சுழன்று கொண்டே இருக்கிறது. 

எண்ணில் அடங்கா தோள்கள் ....இந்த உலகம் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தால்   எத்தனை தோள்கள் இருக்கும். 

சூரியனையும் சந்திரனையும் கண்களாக ....

மேலும் சிந்திப்போம் ....

----------------------------------/ சூரியனையும் சந்திரனையும் கண்களாக/---------------------

சூரியனையும் சந்திரனையும் கண்களாக என்றால் ஏதோ நிஜமாகவே ஒரு கண்ணு சூரியன் போல  பெரிதாக, நெருப்பாக இருக்கும், இன்னொரு கண்ணு    சந்திரனைப்போல  சின்னதாக குளிர்ச்சியாக இருக்கும் என்று அர்த்தம் அல்ல. அப்படி இருந்தால்  பார்க்க சகிக்குமா ?

அதன் அர்த்தம் என்ன ?

இரவு பகல் என்று அனைத்து நேரங்களிலும் சர்வ சாட்சியாக இருப்பவன் அவன். யாரும் பார்க்கவில்லை என்று தவறு செய்யக் கூடாது. சூரியனோ, சந்திரனோ சாட்சியாக இருக்கும் வரை யாரும் பார்க்கவில்லை என்று நினைக்கக் கூடாது.

கோவலன் வெட்டுப் பட்டான். அவன் குற்றமற்றவனா இல்லையா என்று என்று  உலகுக்கு எப்படி அறிவிப்பது ?

 கண்ணகி கேட்கிறாள் , யாரிடம் தெரியுமா ?

காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’-

என்று கதிரவனிடம் கேட்கிறாள். அவன் தான் எல்லாவற்றிற்கும் சாட்சி. 

உங்கள் வாழ்கையை நீங்கள் ஒரு பார்வையாளனாக நின்று வேடிக்கை பாருங்கள். சுவாரசியமாக இருக்கும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஒரு மூன்றாம் மனிதர் போல் தள்ளி நின்று  கவனித்துப் பாருங்கள். வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தம் தெரியும்.

ஓடுவதும், ஆடுவதும், பொய் சொல்லுவதும், ஏமாற்றுவதும், உருகுவதும்,  எல்லாம்  ஒரு திரைப் படம் போல, நாடகம் போலத் தெரியும்.

இந்த உலகம் அனைத்தையும் பார்க்கும் கண்கள் சூர்யனும் சந்திரனும்.

அந்த கண்களை உன்னில் காண்கிறேன் என்கிறான் அர்ஜுனன்.

ஆழ்ந்து சிந்தித்தால் அந்த கண்கள் என்ன என்று உங்களுக்கும் புரியும் ...


Sunday, October 12, 2014

கீதை - 11.19 - தொடக்கம், நடு , முடிவு இல்லாத

கீதை - 11.19 - தொடக்கம், நடு ,  முடிவு இல்லாத  


अनादिमध्यान्तमनन्तवीर्य मनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥११- १९॥

அநாதி³மத்⁴யாந்தமநந்தவீர்ய மநந்தபா³ஹும் ஸ²ஸி²ஸூர்யநேத்ரம் |
பஸ்²யாமி த்வாம் தீ³ப்தஹுதாஸ²வக்த்ரம் ஸ்வதேஜஸா விஸ்²வமித³ம் தபந்தம் || 11- 19||


அநாதி - மத்யா - அந்தம் = தொடக்கம், நடு , முடிவு இல்லாத

அநந்த வீர்ய = எல்லை அற்ற வீர்யம் உள்ள

அநந்த பாஹும் = அனேக தோள்களுடன்

 ஸஸி ஸூர்ய நேத்ரம் = சந்திரனையும், சூர்யனையும் கண்களாகக் கொண்டு

பஸ்²யாமி = பார்கிறேன்

த்வாம் = உன்னை

தீப்தஹுதாஸவக்த்ரம் = கொழுந்து விட்டு எரியும் தீ போன்ற வாயினையும்

ஸ்வ தேஜஸா = தன்னுடைய ஒளியினால்

விஸ்வ மிதம் தபந்தம் = இந்த உலகை எரிப்பவனாகவும் காண்கிறேன்

தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.

இது ஏதோ ஒரு பயங்கரமான உருவம் போல  இருக்கிறது. தீ கக்கும் வாய், சூர்ய சந்திரர்கள் கண் போன்றவை என்றால் ஒரு கண்

பெரிதாகவும்,இன்னொன்று ரொம்ப சிறிதாகவும் இருக்கும். பார்க்க சகிக்காது. பல்லாயிரம் தோள்கள், பெரிதும் சிறிதுமான  கண்கள்....

விஸ்வரூபம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டால் இந்த சிக்கல் இருக்காது.

இதை கொஞ்சம் எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்.

 அழகான பெண்ணைப் பார்க்கிறோம்.

அந்த பெண் எப்படி இருக்கிறாள் என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

அவள் கண் நான்கு சென்டிமீட்டர் அகலமும், ஒரு சென்டிமீட்டர் உயரமும் இருந்தது, அவள் ஐந்து அடி எட்டு அங்குலம் இருந்தாள் , எடை ஒரு அறுபது கிலோ இருக்கும் ...என்றா சொல்லுவோம்....

இது எல்லாம் அவளின் கூறுகள்தான் தான்...

ஆனால் அந்த பெண் என்பவள் இந்த கை கால் மூக்கு என்ற அவயங்கள் இல்லை.

இவை அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை.

ஒரு முழுமையான ஒரு உருவம்.

பெண் என்பது ஒரு உதாரணத்திற்கு  சொன்னது.

தாஜ் மகால் என்றால் என்ன என்று கேட்டால் அது இத்தனை ஆயிரம் சலவை கற்களை கொண்டது என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அந்த கற்கள் அனைத்தையும் ஒன்று சேர பார்பதுதான் தாஜ் மகால். ஒவ்வொரு கல்லாகப் பார்த்தால்  தாஜ் மகால்  தெரியாது.கல்தான்  தெரியும்.

அது போல,

இந்த  ,உலகை , இந்த பிரபஞ்சத்தை ஒன்றாகப் பார்க்க  வேண்டும்.

கையும் காலும், கண்ணும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவைதான்.  அனைத்தும் சேர்ந்து ஒரு பெண்ணாக நாம் பார்ப்பது இல்லையா ?

அது போல

 மரமும்,செடியும், ஆணும், பெண்ணும், விலங்குகளும், உயிரற்ற பொருள்களையும் ஒன்றாகக் காண்பதுதான் விஸ்வ ரூபம்.

 விஸ்வம் என்றால்  உலகம்.

ரூபம் என்றால்  வடிவம்.

 உலகை ஒரே வடிவாக காண்பது  விஸ்வரூபம்.

இப்போது மீண்டும் ஸ்லோகத்தைப்  பார்ப்போம்.


தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.


இந்த உலகில் உயிர்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன, வாழ்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்து கொண்டும் இருக்கின்றன. 

பிறப்பு ஒரு போதும்  நிற்பது இல்லை. அது போலவே  நடுவான வாழ்வும், இறுதியான இறப்பும். இது தொடர்ந்து நடந்து கொண்டே  இருக்கிறது.

இவற்றை நீங்கள் ஒன்றாகப் பார்த்தால் தெரியும் இது தொடக்கம், நடு மற்றும் இறுதி இல்லாதது  என்று. ஒரு சக்கரம் போல  சுழன்று கொண்டே இருக்கிறது. 

எண்ணில் அடங்கா தோள்கள் ....இந்த உலகம் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தால்   எத்தனை தோள்கள் இருக்கும். 

சூரியனையும் சந்திரனையும் கண்களாக ....

மேலும் சிந்திப்போம் ....

Sunday, September 21, 2014

கீதை - 11.18 - அறியத்தக்கதில் உயர் தனி இடம் நீ

கீதை - 11.18 - அறியத்தக்கதில் உயர் தனி இடம் நீ 



त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानम् ।
त्वमव्ययः शाश्वतधर्मगोप्ता सनातनस्त्वं पुरुषो मतो मे ॥११- १८॥

த்வமக்ஷரம் பரமம் வேதி³தவ்யம் த்வமஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் |
த்வமவ்யய: ஸா²ஸ்²வதத⁴ர்மகோ³ப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே || 11- 18||

த்வம் = நீயே

அக்ஷரம் = அழிவற்றவன் (க்ஷரம் = அழியக்  கூடியது. அக்ஷரம் = அழிவற்றது)

பரமம்  = உயர்ந்தவன்

வேதிதவ்யம்= அறியத்தக்கதவன்

த்வம் = நீ 

அஸ்ய = இந்த

விஸ்வஸ்ய = இந்த பிரபஞ்சத்தில்

பரம் = ஆதி, உயர்ந்தது

நிதாநம் = உறைவிடம்

த்வம் = நீயே 

அவ்யய: = மாறாத

ஸாஸ்வத = நிரந்தரமான

தர்ம = தர்மத்தின்

கோப்தா = காவலன்

ஸநாதந = நிரந்தரமான, அழிவற்ற

த்வம் = நீயே

புருஷோ =  புருஷன்

மதோ மே = என்று நான் நினைக்கறேன்

நீயே அழிவில்லாதவன், அறியதக்கவற்றில் உயர்ந்தவன் நீ, என்றும் உள்ள அறத்தினை காக்கும் புருஷன் நீ. 

எது அழிவில்லாதது ?

பிறக்கும் எதுவும் அழியும்.

தோன்றும் எதுவும் மறையும்.

எனவே அழிவில்லாதது பிறக்காத, தோன்றாத ஒன்றாக இருக்க வேண்டும்.

பிறக்காத, தோன்றாத என்றால் எப்போதும் அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.

எது அது ?

அது பொருளாக இருக்க முடியாது. பொருள் என்றால் தோற்றுவிக்கப் பட்டிருக்க வேண்டும்.

அது எந்த ஒரு உயிராகவும் இருக்க முடியாது. உயிர் என்றால் பிறந்திருக்க வேண்டும்.

பின் எது அது ?

இந்த உலகை நடத்திச் செல்லும் அறம் அல்லது உண்மை.

எந்த உண்மை, எந்த விதி, எந்த அறம் என்றும் நிலைத்து நிற்கிறதோ அதுவே  நீ என்று  அர்ஜுனன் அறிகிறான்.

அதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்த மாதிரி.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

பொருள்கள் கீழே விழுகின்றன.  ஆப்பிள் விழுகிறது, கல் விழுகிறது, இல்லை விழுகிறது, மழை விழுகிறது...ஒவ்வொன்றுக்கும் ஒரு விதி இருக்கிறதா ? இல்லை அனைத்தையும் இயக்கம் ஒரு விதி இருக்கிறதா ?

ஒரு விதி அனைத்தையும் கட்டுப் படுத்துகிறது. அந்த விதி சாஸ்வதமானது. என்றும் உள்ளது. அழிவில்லாதது.

அதை அறிந்தால், கீழே விழும் பொருள்கள பற்றிய அனைத்தையும் அறிந்த மாதிரி.

இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு விதி இருக்கிறதா அல்லது கீழே விழுவது, மேலே எழுவது, பக்கவாட்டில் நகர்வது என்று எல்லாவற்றிக்கும் சேர்த்து ஒரு விதி இருந்தால் எப்படி இருக்கும் ?

அதை அப்படியே இன்னும் விரிவாக்கினால், மனிதர்களின் எண்ணங்களை,  செயல்களை, இவற்றை கட்டுப் படுத்தும் ஒரு விதி இருக்கும் என்றால் அதை  அறிவது எவ்வளவு முக்கியம். அந்த விதியை இறைவனாக காண்கிறான் அர்ஜுனன்.








Wednesday, September 3, 2014

கீதை - 11.17 - மகுடம், கதை, சக்ராயுதம்

கீதை - 11.17 - மகுடம், கதை, சக்ராயுதம் 



किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतो दीप्तिमन्तम् ।
पश्यामि त्वां दुर्निरीक्ष्यं समन्ता द्दीप्तानलार्कद्युतिमप्रमेयम् ॥११- १७॥

கிரீடிநம் க³தி³நம் சக்ரிணம் ச தேஜோராஸி²ம் ஸர்வதோ தீ³ப்திமந்தம் |
பஸ்²யாமி த்வாம் து³ர்நிரீக்ஷ்யம் ஸமந்தா த்³தீ³ப்தாநலார்கத்³யுதிமப்ரமேயம் || 11- 17||

கிரீடிநம் = கிரீடம்

கதிநம் = கதை

சக்ரிணம் = சக்ராயுதம்

ச = மேலும்

தேஜோராஸிம் = ஒளி வீசும்

ஸர்வதோ = அனைத்து திக்குகளிலும்

தீப்திமந்தம் = ஒளியூட்டும்

பஸ்யாமி = நான் பார்க்கிறேன்

த்வாம் = உன்னை

துர் நிரீக்ஷ்யம் = மனதில் நிறுத்த கடினமான

ஸமந்தா த் = அனைத்து பகுதிகளிலும்

தீ³ப்தாநலார்கத்³ = சூரியனைப் போல ஒளி விடும்

அப்ரமேயம் = அளவிட முடியாத



கிரீடமும், கதையும், சக்ராயுதமும் கொண்ட சூரியனைப் போல ஒளிவிடும் உன் அளவிட முடியாத உருவத்தை நான் காண்கிறேன் 

கண்ணனின் அந்த விஸ்வரூபம்  தலையில் கிரீடம், கையில் கதை  மற்றும் சக்கரம்  ஏந்தி  இருக்கிறது. மிக மிக பிரகாசமாய் ஒளி விட்டுக் கொண்டு இருக்கிறது.


திருமாலை வர்ணிக்கும் போது சங்கு, சக்கரம், கதை, கிரீடம், பட்டு பீதாம்பரம்  என்று வர்ணிப்பது  வழக்கம்.


இப்படி ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது.

இதன் உள் அர்த்தம்  என்ன.

சங்கு - கடமையைச்  செய்ய விடும் அழைப்பு

கதை - கடமையில் இருந்து  தவறுபவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை ஒழுங்கு  படுத்தும் கருவி.

சக்கரம் - தானும் கடமையைச் செய்யாமல், செய்பவர்களையும் தடுத்து   அக்கிரமம் செய்பவர்களை   அழிக்க வந்த கருவி.

மகுடம், பட்டு பீதாம்பரம் - கடமையை சரிவர செய்தால் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும்

ஒளி வீசும் உருவம் - அஞ்ஞான இருளை போக்கும் ஞான ஒளி .

மேலே சொன்னவற்றை  தெளிவாக உணர்த்தும் ஞானம் தான் ஒளி .

விஸ்வரூபம் தரும் பாடம்...

மேலும் படிப்போம்.