கீதை - 9.24 - அனைத்து வேள்விகளின் பலனும் எனக்கே - பாகம் 2
अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥९- २४॥
அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ⁴க்தா ச ப்ரபு⁴ரேவ ச |
ந து மாமபி⁴ஜாநந்தி தத்த்வேநாதஸ்²ச்யவந்தி தே || 9- 24||
அஹம் = நான்
ஹி = நிச்சயமாக
ஸர்வ = அனைத்து
யஜ்ஞாநாம் = வேள்விகளின்
போ⁴க்தா = பலன்களை அனுபவிப்பவன்
ச = மேலும்
ப்ரபு = தலைவன்
எவ = மேலும்
ந = இல்லை
து = ஆனால்
மாம் = நான்
அபி⁴ஜாநந்தி = அவர்கள் அறிவது
தத்த்வேந = உண்மையில்
அதா = அதனால்
ஸ்²ச்யவந்தி = வீழ்கிறார்கள்
தே = அவர்கள்
நானே வேள்விகளில் எல்லாம் பலன்களையும் பெற்றுக் கொள்பவன் (அவிர் பாகத்தை உண்பவன்) ; நானே தலைவன்; என்னை மக்கள் உள்ளபடி அறிய மாட்டார்கள் ; ஆதலால் அவர்கள் வீழ்கிறார்கள் .
இன்பம் என்பது வெளியில் இருக்கிறதா அல்லது நமக்குள் இருக்கிறதா ?
நல்ல உணவை ருசிக்கும் போது கண்ணை மூடிக் கொண்டு "அடடா என்ன ஒரு சுவை என்கிறோம் "
நல்ல இசையை கேட்கும் போது நம்மை அறியாமலேயே நம் கண்கள் மூடிக் கொள்கின்றன....
இன்பத்தின் அனுபவம் உள்ளே நிகழ்கிறது...
ஒரு காலகட்டத்தில் இன்பம் என்று நினைத்தது இன்னொரு சமயத்தில் இன்பமாக இருப்பது இல்லை.
சிறு வயதில் கோலியும் , பம்பரமும், பட்டமும் இன்பம் தந்தன.வயதான காலத்தில் அதில் இன்பம் இல்லை.
இன்று இன்பம் தருபவை நாளையும் தரும் என்பது நிச்சயம் இல்லை.
மாறும்.
அது போலத் தான் துன்பமும்.
இன்பமும் துன்பமும் வெளியே இல்லை. நமக்குள், நம்மால் நிகழ்கின்றன.
இராஜ்ஜியம் தந்த போது பெரிய இன்பம் இல்லை - இராமனுக்கு
கானகம் போ என்று சொன்ன போதும் பெரிய துன்பம் இல்லை.
ஏன் ?
எப்படி முடிந்தது ?
இன்பம் இராஜியத்தில் இல்லை
துன்பம் கானகத்தில் இல்லை.
இன்பமும் துன்பமும் தனக்குள் இருக்கிறது என்று அவன் அறிந்திருந்தான். எனவே இன்பத்திலும் துன்பத்திலும் சலனம் இல்லை.
"அனைத்து வேள்விகளின் பலனை நானே பெறுகிறேன். இதை அறியாதவன் வீழ்வான் "
இன்பம் நமக்குள் என்றால் ஏன் இந்த அலைச்சல்
துன்பம் நமக்குள் என்றால் ஏன் இந்த கவலை
இதை அறியும் போது மனம் இலேசாகிப் போகிறது.
வாழ்க்கை எளிதாகிப் போகிறது.
யாரோடும் கோபம் இல்லை. போராடும் வேலை இல்லை.
சிந்திப்போம்.
சிறு வயதில் கோலியும் , பம்பரமும், பட்டமும் இன்பம் தந்தன.வயதான காலத்தில் அதில் இன்பம் இல்லை.
இன்று இன்பம் தருபவை நாளையும் தரும் என்பது நிச்சயம் இல்லை.
மாறும்.
அது போலத் தான் துன்பமும்.
இன்பமும் துன்பமும் வெளியே இல்லை. நமக்குள், நம்மால் நிகழ்கின்றன.
இராஜ்ஜியம் தந்த போது பெரிய இன்பம் இல்லை - இராமனுக்கு
கானகம் போ என்று சொன்ன போதும் பெரிய துன்பம் இல்லை.
ஏன் ?
எப்படி முடிந்தது ?
இன்பம் இராஜியத்தில் இல்லை
துன்பம் கானகத்தில் இல்லை.
இன்பமும் துன்பமும் தனக்குள் இருக்கிறது என்று அவன் அறிந்திருந்தான். எனவே இன்பத்திலும் துன்பத்திலும் சலனம் இல்லை.
"அனைத்து வேள்விகளின் பலனை நானே பெறுகிறேன். இதை அறியாதவன் வீழ்வான் "
இன்பம் நமக்குள் என்றால் ஏன் இந்த அலைச்சல்
துன்பம் நமக்குள் என்றால் ஏன் இந்த கவலை
இதை அறியும் போது மனம் இலேசாகிப் போகிறது.
வாழ்க்கை எளிதாகிப் போகிறது.
யாரோடும் கோபம் இல்லை. போராடும் வேலை இல்லை.
சிந்திப்போம்.